செய்திகள்
முகமூடி அணிந்து செல்லும் மக்கள்

பாகிஸ்தானில் மேலும் 3,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-11-28 00:15 GMT   |   Update On 2020-11-28 00:15 GMT
பாகிஸ்தான் நாட்டில் மேலும் 3,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொடூர கொரோனா அண்டை நாடான பாகிஸ்தானிலும் பரவி வருகிறது.

கொரோனா பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொது இடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 3,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 3,89,311 ஆக உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,897 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை  3.35 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,112 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
Tags:    

Similar News