செய்திகள்
கோப்புப்படம்

சீனாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா

Published On 2020-10-31 19:32 GMT   |   Update On 2020-10-31 19:32 GMT
சீனாவில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீஜிங்:

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா முதன் முதலில் சீன நாட்டில் தான் வெளிப்பட்டது. சீன சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி அந்த நாட்டில் இதுவரை 85 ஆயிரத்து 973 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதில் நேற்றைய நிலவரப்படி 38 பேர் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் 6 பேருக்கு உள்ளூர் தொடர்பால் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சீனாவில் கொரோனாவுக்கு இதுவரை 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்து உள்ளனர். 80 ஆயிரத்து 984 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News