செய்திகள்
கோப்பு படம்

ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று - அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கிய கொரோனா - அப்டேட்ஸ்

Published On 2020-10-22 01:14 GMT   |   Update On 2020-10-22 01:14 GMT
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 14 லட்சத்தை கடந்தது.
ஜெனீவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 14 லட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 597 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்து 44 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 26 ஆயிரக்த்து 688 பேருக்கும், பிரான்சில் 26 ஆயிரத்து 676 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் உலகிலேயே கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4 கோடியே 14 லட்சத்து 58 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 94 லட்சத்து 36 ஆயிரத்து 214 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 74 ஆயிரத்து 78 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 3 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 11 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 85,81,753
இந்தியா - 76,51,108
பிரேசில் - 53,00,649
ரஷியா - 14,47,335
ஸ்பெயின் - 10,46,641
அர்ஜெண்டினா - 10,37,325
கொலம்பியா - 9,81,700
பிரான்ஸ் - 9,57,421
பெரு - 8,76,885
மெக்சிகோ - 8,60,714

Tags:    

Similar News