செய்திகள்
பஸ் விபத்து

பாகிஸ்தானில் கோர விபத்து - பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி

Published On 2020-10-18 19:38 GMT   |   Update On 2020-10-18 19:38 GMT
பாகிஸ்தானில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் இருந்து கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கர்து நகர் நோக்கி பயணிகள் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியத்தின் ரவுண்டோ நகரில் மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பாறைகள் உருண்டு நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது பாறை ஒன்றின் மீது மோதிய பஸ் சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த படுகாயம் அடைந்தனர்.
Tags:    

Similar News