செய்திகள்
வீரர்களிடையே உரையாற்றிய சீன அதிபர்

போருக்குத் தயாராகுங்கள்... ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த சீன அதிபர்

Published On 2020-10-15 08:52 GMT   |   Update On 2020-10-15 08:52 GMT
சீனாவின் குவாங்டாங் ராணுவ தளத்திற்கு சென்ற அதிபர், போருக்குத் தயாராகும் ஆற்றலுடன் மனதை வைக்கும்படி ராணுவ வீரர்களை கேட்டுக்கொண்டார்.
பீஜிங்:

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து கடுமையான மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஒரு ராணுவ தளத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, மக்கள் இராணுவ விடுதலை (பி.எல்.ஏ) வீரர்களிடையே பேசிய அவர், போருக்குத் தயாராகும் ஆற்றலுடன் மனதை வைத்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உரை நிகழ்த்துவதற்காக ஜின்பிங் குவாங்டாங்கிற்கு பயணம் செய்தார்.

குறிப்பாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்திய குழுவின் பொதுச் செயலாளரும், மத்திய ராணுவ ஆணையத்தின் (சிஎம்சி) தலைவருமான ஜி ஜின்பிங் , சீனாவிற்கும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்துள்ள பதற்றங்களுக்கு மத்தியில் இந்த கருத்துக்களை தெரிவித்து உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 13 ஆம் தேதி சாவோஜூவில் உள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) கடற்படை பிரிவை அதிபர் ஆய்வு செய்தபோது இந்த கருத்தை கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

லடாக் எல்லையில் நிலவும் பதற்றங்களை குறைக்கும் முயற்சியில், இந்தியாவும் சீனாவும் ஏழாவது சுற்று இராணுவப் பேச்சுவார்த்தைகளை அக்டோபர் 12 அன்று நடத்தின. 

கூட்டு பத்திரிகை அறிக்கையில் இரு தரப்பினரும் "முடிந்தவரை விரைவாக" படையை திரும்ப பெற  செய்வதற்கான பரஸ்பர ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை அடைந்தனர்.

இருப்பினும், ஒரு நாள் கழித்து சீனா மீண்டும் யூனியன் பிரதேசமான லடாக்,  அருணாச்சல பிரதேசத்தை சீனா அங்கீகரிக்கவில்லை என வலியுறுத்தியது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், இந்தியா எல்லையில் கட்டமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு "பதற்றங்களுக்கு மூல காரணம்" என்று கூறினார்.
Tags:    

Similar News