செய்திகள்
சாலை விபத்து

தாய்லாந்தில் சோகம் - லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலி

Published On 2020-09-26 22:27 GMT   |   Update On 2020-09-26 22:27 GMT
தாய்லாந்து நாட்டில் லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பாங்காக்:

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ளது நக்கோன் ராட்சாசிமா மாகாணம். இங்குள்ள நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த பேருந்து எதிர்த் திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
Tags:    

Similar News