செய்திகள்
கரை ஒதுங்கிய திமிங்கலம்

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் செத்து ஒதுங்கிய 25 திமிங்கலம்- 270 போராட்டம்

Published On 2020-09-21 14:16 GMT   |   Update On 2020-09-21 14:16 GMT
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் 25 பைலட் திமிங்கலங்கள் செத்து ஒதுங்கிய நிலையில், 270 உயிருக்கு போராடி கொண்டு இருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 300-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. தகவல் அறிந்த அரசு ஆராய்ச்சியாளர்கள். இந்த திமிங்கலங்களை கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர்.

அதில் 25 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன. 270 உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு திமிங்கலமும் 7 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 3 டன் எடை கொண்டதாகவும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், டாஸ்மானியா கடற்கரையில் இதுபோன்று ஒதுங்குவது அசாதாரணமானது அல்ல. ஆனால் இந்த அளவில் ஒதுங்கியது எதிர்பார்க்காதது. கடந்த 10 ஆண்டுகளில் கரை ஒதுங்கியது கிடையாது என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News