செய்திகள்
துருக்கியை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது
துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது.
அங்காரா:
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் துருக்கி 19-வது இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில், துருக்கியில் ஒரே நாளில் 1,519 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, துருக்கியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 867 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,506 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.