செய்திகள்
கோப்பு படம்

இங்கிலாந்து நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி - மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை தொடக்கம்

Published On 2020-08-25 21:55 GMT   |   Update On 2020-08-26 02:14 GMT
இங்கிலாந்து நாட்டின் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.
லண்டன்:

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. 

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இங்கிலாந்தின் பிரபல மருந்து நிறுவனம் உருவாக்கிய ஆக்ஸ்போர்டு தடுப்பூசியில் நல்ல பலன் கிடைப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க கூட்டு முயற்சி இல்லாமல் தனியாகவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனம் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனம் கொரோனா வைரசுக்கு ஏஇஎட்டி 7442 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை தொடங்க உள்ளது. இந்த பரிசோதனைக்காக 18 முதல் 55 வயது வரை உள்ள 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் ஏஇஎட்டி 7442 கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த பரிசோதனையில் தடுப்பூசி கொரோனா வைரசை கடுப்படுத்தி கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அடுத்த இரண்டு கட்ட பரிசோதனைகளும் துரிதப்படுத்தப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கொரோனா தடுப்பூசியை தயாரிக்க இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனத்திற்கு அமெரிக்கா பல கோடிகள் நிதியுதவி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags:    

Similar News