செய்திகள்
டிரம்ப், ஜோ பிடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - இந்துக்களின் வாக்குகளை கவர டிரம்ப், ஜோ பிடன் தீவிர பிரசாரம்

Published On 2020-08-20 01:31 GMT   |   Update On 2020-08-20 01:31 GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்து சமூகத்தின் வாக்குகளைக் கவரும் விதமாக டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகிய இருவரும் தங்களின் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நியூயார்க்:

அமெரிக்காவில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். 2016-ம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகையின்படி ஒரு சதவீதம் பேர் இந்துக்கள் ஆவர். இருப்பினும் அமெரிக்க அரசியலில் இந்துக்களுக்கான முக்கியத்துவம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதன் அடையாளமாக நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இந்து சமூகத்தின் வாக்குகளைக் கவரும் விதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் தங்களின் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவில் இந்துக்களுக்கு மத சுதந்திரங்களுக்கான தடைகளை குறைக்கும் என டிரம்பின் பிரசாரக்குழு உறுதி அளித்துள்ளது. அதேபோல் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இந்து நம்பிக்கை சமூகத்திற்கு முன்னுரிமை அளிப்பார் என அவரது பிரசாரக்குழு தெரிவித்துள்ளது.

இதனை உறுதி செய்யும் விதமாக ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில் அமெரிக்காவின் பிரபல இந்து தலைவர் நீலிமா கோனுகுண்டாலா கலந்துகொண்டு வேத மந்திரங்களை படித்தார்.

இதனிடையே அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ‘டிரம்புக்கான இந்து குரல்கள்’ என்கிற அமைப்பை டிரம்ப் பிரசார குழு தொடங்கியுள்ளது.
Tags:    

Similar News