செய்திகள்
கொரோனா பரிசோதனை

பிரேசிலை உலுக்கும் கொரோனா - 31.5 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

Published On 2020-08-13 01:01 GMT   |   Update On 2020-08-13 01:01 GMT
பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ரியோ டி ஜெனிரோ:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.70 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 1,160-க்கும் அதிகமானோர் பலியானதை தொடர்ந்து, அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.04 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.
Tags:    

Similar News