செய்திகள்
நியூயார்க் சுகாதார ஆணையராக இந்திய டாக்டர் நியமனம்
நியூயார்க் நகரின் புதிய சுகாதார ஆணையராக முன்னணி இந்திய வம்சாவளி டாக்டர் டாவே ஏ.சோக்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்:
சமீபத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததில் முக்கிய பங்கு வகித்தார். அதனால் அவரை நியமிப்பதாக நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர சுகாதார ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர் ஆக்சிரிஸ் பர்போட், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நியூயார்க் நகரின் புதிய சுகாதார ஆணையராக முன்னணி இந்திய வம்சாவளி டாக்டர் டாவே ஏ.சோக்சி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 39. சோக்சி, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.
சென்ற தலைமுறையில், அவருடைய தந்தை, அமெரிக்காவில் குடியேறினார். அங்கேயே பிறந்து வளர்ந்த சோக்சி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவர். பொது சுகாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
சமீபத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததில் முக்கிய பங்கு வகித்தார். அதனால் அவரை நியமிப்பதாக நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ அறிவித்துள்ளார்.