செய்திகள்
இலங்கை தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலால் பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் சுகாதார அதிகாரிகள்

Published On 2020-08-03 16:01 GMT   |   Update On 2020-08-03 16:01 GMT
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பணியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இலங்கையில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வரும் நிலையிலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்டு ஐந்தாம் தேதி (நாளைமறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

ஒரு கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், சிறப்பு போலீஸ் படை, புலானாய்வுத்துறையினர் ஈடுபட இருக்கிறார்கள். தற்போது கொரோன வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் போலீசாருடன் இணைந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

தனிமைப்படுத்தி கொண்டவர்கள் மாலை 4 மணியில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏராளமான மக்கள் வாக்களிக்க வருவார்கள். ஆனால் வாக்கு மையத்தில் கூட்டம் அதிக அளவில் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம் என்று சுகாதாரத்துறை பொது செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாளைமறுதினம் காலை 7 மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கை வழிகாட்டுதல் நெறிமுறை அடிப்படையில் நடைபெறும்.

வாக்களிக்க வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பிற்கு ராணுவம் அழைக்கப்படாது என்று தலைமை தேர்தல் அதிகாரி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏப்ரல் மாதம் மத்தியில் தேர்தல் நடைபெற இருந்தது. கொரோனா அப்போது உச்சத்தில் இருந்ததால் ஜூன் 20-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்டு ஐந்தாம் தேதிக்கு மாற்றப்பட்டது.
Tags:    

Similar News