செய்திகள்
அமெரிக்க போர் விமானம் (கோப்புப்படம்)

சீனாவை சுற்றி வட்டமிடும் அமெரிக்க போர் விமானங்கள்

Published On 2020-07-28 03:02 GMT   |   Update On 2020-07-28 03:02 GMT
அமெரிக்க போர் விமானங்கள் சீனா மீது பறந்துள்ளன. ஷாங்காயில் இருந்து 76.5 கி.மீ தூரத்திற்குள் பறந்துள்ளதாக பீக்கிங் பல்கலைக்கழக குழு தெரிவித்துள்ளது.
பீஜிங்:

கடந்த வாரம், அமெரிக்கா டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது, சீன தூதரக அமெரிக்காவைச் சுற்றியுள்ள தூதரக வசதிகளைப் பயன்படுத்தி சீன உளவு முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியது.

வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முதல் ராஜதந்திரம் மற்றும் தென் சீனக்கடல் வரையிலான தொடர்ச்சியான மோதல்களில் சமீபத்தில் தூதரக மூடல் மோதல்களும் இணைந்து உள்ளன.

சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், இது எதிர்வரும் மாதங்களில் ஒரு ராணுவ மோதலாக உருமாறி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் அமெரிக்க போர் விமானங்கள் சீனா மீது பறந்துள்ளன, ஷாங்காயில் இருந்து 76.5 கி.மீ தூரத்திற்குள் பறந்துள்ளன என பீக்கிங் பல்கலைக்கழக சிந்தனைக்குழு ஒன்று கூறி உள்ளது.

அமெரிக்காவின் பி -8 ஏ (போஸிடான்) நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம் மற்றும் ஈபி -3 இ உளவு விமானம் தைவான் ஜலசந்தியில் நுழைந்தன, ஞாயிற்றுக்கிழமை ஜெஜியாங் மற்றும் புஜியான் கடற்கரைக்கு அருகே பறந்தன என தென் சீனக்கடல் மூலோபாய சூழ்நிலை ஆய்வின் பீக்கிங் பல்கலைக்கழக சிந்தனைக்குழு கூறி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை இந்த நடவடிக்கை குறித்து டுவிட் செய்தது, பின்னர் புஜியான் மற்றும் தைவான் ஜலசந்தியின் தெற்குப் பகுதியை நெருங்கி உளவு விமானம் மீண்டும் பறந்து கொண்டிருப்பதாகக் கூறியது.

பி-8 ஏ ஷாங்காயிலிருந்து 76.5 கி.மீ தூரத்திற்குள் பறந்தது, மற்ற விமானம் புஜியனின் தெற்கு கடற்கரையிலிருந்து 106 கி.மீ தூரத்திற்குள் பறந்தது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

தொடர்ச்சியாக 12 வது நாட்களாக அமெரிக்க ராணுவ விமானங்கள் பிரதான கடற்கரையை நெருங்கியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது.

பீக்கிங் பல்கலைக்கழக சிந்தனைக்குழு ஒரு அமெரிக்க விமானப்படை ஆர்.சி -135 டபிள்யூ விமானம் - மற்றொரு உளவு விமானம் - தைவானின் வான்வெளியில் நுழைந்து அதை யாராவது உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்டது. தைவானிய பாதுகாப்பு அமைச்சகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஆனால் பிற்பகலில், நிறுவனம் மீண்டும் ஒரு டுவிட் செய்தது, கடற்கரையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள குவாங்டாங்கை ஒரு ஈ.பி -3 விமானம் நெருக்கமான கண்காணிப்பை நடத்தி வருவதாகக் கூறி உள்ளது.

சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, அமெரிக்க விமானப்படை ஈ -8 சி கண்காணிப்பு விமானங்கள் கடந்த வாரத்தில் நான்கு சந்தர்ப்பங்களில் குவாங்டாங் மாகாணத்தின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 185 கி.மீ அல்லது அதற்கும் குறைவாக பறந்துள்ளன.

இந்த நேரத்தில் அமெரிக்க ராணுவம் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் ஐந்து உளவு விமானங்களை தென் சீனக் கடலுக்கு அனுப்புகிறது," என்று சிந்தனைக்குழு கூறி உள்ளது. அமெரிக்க ராணுவ விமானங்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து பல முறை சீனாவின் வான்வெளிக்கு அசாதாரணமாக வந்துள்ளன என்று தென் சீனா மார்னிங் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News