செய்திகள்
பாதாம்பருப்பில் துபாய் ஆட்சியாளர் - இந்திய பிரதமர் ஓவியம்
இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் பாதாம் பருப்பில் துபாய் ஆட்சியாளர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கை குலுக்குவது போன்ற ஓவியத்தை வரைந்துள்ளார்.
துபாய்:
துபாய் ஆட்சியாளர், அமீரக துணை அதிபர் மற்றும் பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமின் 71-வது பிறந்த நாள் நேற்று ஆகும். இதனையொட்டி இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் அமன் சிங் குலாதி பாதாம் பருப்பில் அவரது உருவத்தை வரைந்துள்ளார்.
இதில் துபாய் ஆட்சியாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கை குலுக்குவது போன்றும், அமீரக, இந்திய தேசிய கொடிகள் பின்னணியில் இருப்பது போன்றும் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியர் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.