செய்திகள்
கொரோனா வைரஸ்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா? ஆய்வில் தகவல்

Published On 2020-07-14 06:15 GMT   |   Update On 2020-07-14 06:15 GMT
கொரோனாவால் குணமடைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட மாதங்களுக்குள் இழந்து மீண்டும் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், குணமடைந்த 3 வாரங்கள்வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு வேகமாக குறைந்தது.

60 சதவீத நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும், 17 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்கள்வரை நோய் எதிர்ப்பு சக்தி நீடித்தது.

3 மாத காலத்தில் நிறைய பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது. சிலருக்கு முற்றிலுமாக போய்விட்டது. இப்படி குணமடைந்தவர்களுக்கு பருவநிலை மாற்றத்தின்போது, மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள், தடுப்பூசி கண்டுபிடிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News