செய்திகள்
கொரோனா வைரஸ்

பிரேசிலில் அடங்காத கொரோனா - 71 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

Published On 2020-07-12 00:48 GMT   |   Update On 2020-07-12 00:48 GMT
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.40 லட்சத்தைக் கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,  கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12.13 லட்சத்தை தாண்டியுள்ளது.
Tags:    

Similar News