செய்திகள்
பரிசோதனை செய்யும் ஊழியர்

அலறும் அமெரிக்கா - நான்கு நாளில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-12 00:23 GMT   |   Update On 2020-07-12 00:23 GMT
கொரோனா வைரஸ் தொற்றால் நான்கு நாளில் 2.5 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளது அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.25 கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.60 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.   

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் நான்கு நாளில் 2.5 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளது அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை நான்காவது நாளாக 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

9-ம் தேதி 61.300, 10-ம் தேதி 63,000, 11-ம் தேதி 71000 மற்றும் இன்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானது.

கடந்த 4 நாளில் சுமார் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்ததால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33.5 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.37 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14.90 லட்சத்தைக் கடந்துள்ளது .
Tags:    

Similar News