செய்திகள்
நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published On 2020-07-12 00:00 GMT   |   Update On 2020-07-12 00:00 GMT
பிலிப்பைன்சில் 5.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாவோ டெல் சூர் மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கிப்லாவான் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக பிலிப்பைன்ஸ் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் கிப்லாவான் நகர் மட்டுமின்றி பன்சாலான், மக்சாய்சாய் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் போது வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை.
Tags:    

Similar News