செய்திகள்
கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடைபெறுகிற ரஷிய ஆய்வுக்கூடம் மீது மின்னல் தாக்கியது
கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடைபெறுகிற ரஷிய ஆய்வுக்கூடம் மீது மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மாஸ்கோ:
ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் ரஷிய அறிவியல் அகாடமியின் ஷெமியாகின் அண்ட் ஓவ்சின்னிகோவ் உயிர் வேதியியல் நிறுவனத்தின் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குதான் அந்த நாட்டுக்கான கொரோனா வைரஸ் பரிசோதனை கருவி உருவாக்கப்பட்டது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி நடக்கிறது.
இந்த ஆய்வுக்கூடத்தின் மீது நேற்று முன்தினம் இரவு திடீரென மின்னல் தாக்கியது. இதில் அதன் கூரையில் தீ பிடித்து லேசாக சேதம் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அந்த தீ அணைக்கப்பட்டு விட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இருப்பினும் ஆய்வுக்கூடத்தினுள் எந்த சேதமும் இல்லை. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை. வழக்கமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் ரஷிய அறிவியல் அகாடமியின் ஷெமியாகின் அண்ட் ஓவ்சின்னிகோவ் உயிர் வேதியியல் நிறுவனத்தின் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குதான் அந்த நாட்டுக்கான கொரோனா வைரஸ் பரிசோதனை கருவி உருவாக்கப்பட்டது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி நடக்கிறது.
இந்த ஆய்வுக்கூடத்தின் மீது நேற்று முன்தினம் இரவு திடீரென மின்னல் தாக்கியது. இதில் அதன் கூரையில் தீ பிடித்து லேசாக சேதம் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அந்த தீ அணைக்கப்பட்டு விட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இருப்பினும் ஆய்வுக்கூடத்தினுள் எந்த சேதமும் இல்லை. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை. வழக்கமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.