செய்திகள்
மும்பை தாக்குதல், ராணா

ஆகஸ்டு 21-ந் தேதி வரை ராணாவை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவு

Published On 2020-07-04 11:51 GMT   |   Update On 2020-07-04 11:51 GMT
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ராணாவை ஆகஸ்டு 21-ந் தேதி வரை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வா‌ஷிங்டன்:

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் தொடர்பாக, கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர் ராணா, இந்தியாவால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற அவர் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த மாதம் 10-ந் தேதி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்டு 21-ந் தேதிக்கு தள்ளி வைத்த மாஜிஸ்திரேட்டு ஜாக்குலின் சூல்ஜியன், அதுவரை சிறையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டார்.
Tags:    

Similar News