செய்திகள்
மியான் ஜாம்செட் காகாகேல்

பாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. மரணம்

Published On 2020-06-04 06:56 GMT   |   Update On 2020-06-04 06:56 GMT
கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை உறுப்பினரான மியான் ஜாம்செட் காகாகேல் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 4,132 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது.

இந்த நிலையில் கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை உறுப்பினரான மியான் ஜாம்செட் காகாகேல் (வயது 65) நேற்று கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். இவர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதியானது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல் நிலை மோமானதால் கடந்த 3 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார்.

நேற்று முன்தினம் சிந்து மாகாண மந்திரி கொரோனாவால் பலியானது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News