செய்திகள்
ஆறுமுகன் தொண்டமான் மறைவு- கோத்தபய ராஜபக்சே இரங்கல்
இலங்கை மந்திரியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொழும்பு:
இலங்கை மந்திரியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மரணம் அடைந்தார். 55 வயதான அவர், உடல் நலக்குறைவால் கொழும்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஆறுமுகம் தொண்டமான் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். மேலும் அவரை இழந்து தவிக்கும் அரவது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.
இலங்கை மந்திரியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மரணம் அடைந்தார். 55 வயதான அவர், உடல் நலக்குறைவால் கொழும்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இலங்கை அரசில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி துறை மந்திரியாக ஆறுமுகன் தொண்டமான் இருந்தார். அவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
ஆறுமுகம் தொண்டமான் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். மேலும் அவரை இழந்து தவிக்கும் அரவது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.