செய்திகள்
ரஷியாவில் நல்வாழ்வு மையத்தில் தீ விபத்து - 9 பேர் உடல் கருகி பலி
ரஷியாவில் நல்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்சி 9 பேர் உடல் கருகி பலியாகினர்.
மாஸ்கோ:
ரஷியா தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள கிராஸ்னோகோர்க் நகரில் தனியாருக்கு சொந்தமான நல்வாழ்வு மையம் உள்ளது. இங்கு நோய்வாய்பட்ட மற்றும் வயது முதிர்ந்த நபர்கள் சுமார் 30 பேர் தங்கவைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நல்வாழ்வு மையத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் கட்டிடம் முழுவதிலும் பரவியது. அதனை தொடர்ந்து, நல்வாழ்வு மையத்தில் இருந்தவர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து வெளியேற தொடங்கினர். அதற்குள் தீ, நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீயின் கோரப்பிடியில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.