செய்திகள்
இந்திய வம்சாவளி பெண் ரேணு கத்தோர்

அமெரிக்காவில் கலை, அறிவியல் அகாடமிக்கு இந்திய பெண் தேர்வு

Published On 2020-04-26 06:49 GMT   |   Update On 2020-04-26 06:49 GMT
அமெரிக்காவில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினராக இந்திய வம்சாவளி பெண் ரேணு கத்தோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் மிகவும் மதிப்பு மிகுந்த கல்வி அமைப்பான அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினராக இந்திய வம்சாவளி பெண் ரேணு கத்தோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 61 வயதான ரேணு, ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தராகவும், பல்கலைக்கழக தலைவராகவும் உள்ளார்.கல்வி துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் பிறந்த ரேணு, கான்பூர் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை பட்டத்தையும், அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் அரசியல், அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலை மற்றும் பி.எச்.டி பட்டங்களையும் பெற்றார்.

அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ரேணு கூறுகையில், “இந்த மதிப்புமிக்க அமைப்பின் அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியளிக்கும், அதே வேளையில், ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க கல்வி குழு ஆகியவற்றிற்கு இது அளிக்கும் மரியாதை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது, எனது தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதற்கு மதிப்புமிக்க வாய்ப்பை எனக்கு அளித்துள்ளது” என கூறினார்.
Tags:    

Similar News