செய்திகள்
இலங்கை பாராளுமன்றம்

இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு

Published On 2020-04-21 08:18 GMT   |   Update On 2020-04-21 08:25 GMT
கொரோனா தாக்கத்தால் இலங்கையில் ஏப்ரல் 25-ந் தேதி நடைபெற இருந்த பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு:

இலங்கையிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அங்கு கடந்த மாதமே ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முதல் ஊடரங்கில் தளர்வு செய்யப்படும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில் அங்கு மீண்டும் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வு அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஜூன் 20-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.

Tags:    

Similar News