செய்திகள்
88 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... கொரோனா அப்டேட்ஸ்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஜெனிவா:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 15 லட்சத்து 6 ஆயிரத்து 420 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 981 பேர் சிக்கிசை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 292 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 88 ஆயிரத்து 147 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள் சில வருமாறு:-
அமெரிக்கா - 14,604
ஸ்பெயின் - 14,792
இத்தாலி - 17,669
பிரான்ஸ் - 10,869
ஜெர்மனி - 2,256
சீனா - 3,333
ஈரான் - 3,993
இங்கிலாந்து - 7,097
பெல்ஜியம் - 2,240
நெதர்லாந்து - 2,248
துருக்கி - 895
பிரேசில் - 800
ஸ்விடன் - 687