செய்திகள்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர்

ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 6 தலிபான்கள் பலி

Published On 2020-04-03 21:21 GMT   |   Update On 2020-04-03 21:21 GMT
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இதற்கிடையே, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது.

அமைதி ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், உள்நாட்டுப் படையினர் மீதான தாக்குதல் தொடரும் எனவும் தலிபான்கள் தெரிவித்தனர். 

இதனால், அரசுப்படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் குண்டூஸ் மாகாணம் குவாலி-ஐ-சல் மாவட்டத்தில் உள்ள தலிபான் மறைவிடங்களை குறிவைத்து  ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். 

இந்த தேடுதல் வேட்டையில் 6 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 7 பயங்ரவாதிகள் காயமடைந்தனர்.

Tags:    

Similar News