செய்திகள்
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய தோண்டப்பட்டுள்ள சவக்குழிகள்

58 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - அதிரும் நாடுகள் ... கொரோனா அப்டேட்ஸ்

Published On 2020-04-03 19:39 GMT   |   Update On 2020-04-03 19:39 GMT
உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஜெனிவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ளது. 

கொரோனாவின் தாக்குதல் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதுவரை அந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 10 லட்சத்து 83 ஆயிரத்து 564 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 58 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.  

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 677 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 39 ஆயிரத்து 252 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 738 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

அமெரிக்கா - 6,803
இத்தாலி - 14,681
ஸ்பெயின் - 10,935
ஜெர்மனி - 1,234
சீனா - 3,322
பிரான்ஸ் - 6,507
ஈரான் - 3,294
இங்கிலாந்து - 3,605
துருக்கி - 425
சுவிஸ்சர்லாந்து - 591
பெல்ஜியம் - 1,143
நெதர்லாந்து - 1,487
கனடா - 178
ஆஸ்திரியா - 168
தென்கொரியா - 174
போர்ச்சீகல் - 246
பிரேசில் - 343
ஸ்வீடன் - 358
அயர்லாந்து - 12
டென்மார்க் - 139
ஈக்வடார் - 145
ரூமேனியா - 133
பிலிப்பைன்ஸ் - 136
இந்தோனேசியா - 181
அல்ஜீரியா - 105
Tags:    

Similar News