செய்திகள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - உலகளவில் பலி எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 .5 லட்சத்தை நெருங்கியுள்ளது.
ஜெனிவா:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அதன் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல், கொரோனாவால் உலகளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.