செய்திகள்
நிலநடுக்கம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு

Published On 2020-03-24 02:29 GMT   |   Update On 2020-03-24 02:29 GMT
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான உய்குரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

பீஜிங் :

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான உய்குரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.21 மணிக்கு அங்குள்ள யிங்பாஷா நகரை நிலநடுக்கம் தாக்கியது.

ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. அதேபோல் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.
Tags:    

Similar News