செய்திகள்
கோப்பு படம்

ஈராக்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் பலி

Published On 2020-03-14 23:17 GMT   |   Update On 2020-03-14 23:17 GMT
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழந்தனர்.
பாக்தாத்:

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமெரிக்கா மற்றும் உள்நாட்டு அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு அவ்வப்போது கொரில்லா போர்முறை பாணியில் அதிரடியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இவர்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஈராக் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் அரசுப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் ஷலாஹிடின் மாகாணம் சமாரா நகரம் ஷோர் அல்-தர்தர் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவப்படையினரை குறிவைத்து நேற்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈராக் துணை ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். 
Tags:    

Similar News