செய்திகள்
டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல்

ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள இந்தியர்கள் 14 பேருக்கு கொரோனா

Published On 2020-02-24 21:27 GMT   |   Update On 2020-02-24 21:27 GMT
ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் வைரஸ் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
டோக்கியோ:

ஹாங்காங்கில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடந்த 4-ம் தேதி ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. 

இதனால், அந்த கப்பலில் இருந்த செய்த பயணிகள் ஜப்பானில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கப்பலில் இருந்த 3700-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு படிப்படியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. 

இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து கீழே இறக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் 100-க்கும் அதிகமான பயணிகள் தீவிர பரிசோதனைகளுக்கு பின்னர் வைரஸ் பரவவில்லை என உறுதியான பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.



இதற்கிடையில், டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 132 ஊழியர்கள் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் 12 பேருக்கு கொரோனா பரவி இருந்தது. 

இந்நிலையில் கப்பலில் உள்ள மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலலை ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனால் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் வைரஸ் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கப்பலில் மொத்தம் 691 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக ஜப்பான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா பரவவில்லை என உறுதி செய்யப்பட்டு ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் என தங்கள் சொந்தநாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு தற்போது வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 
Tags:    

Similar News