செய்திகள்
கோப்பு படம்

ஆப்கானிஸ்தான் : பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

Published On 2020-02-13 21:15 GMT   |   Update On 2020-02-13 21:15 GMT
ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் டேஹுடி மாகாணத்திற்கு உள்பட்ட நிலி, மிரமூர், அஸ்டர்லே உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இதனால், அப்பகுதிகளில் இருந்த பல வீடுகள் பனியால் மூடப்பட்டன. மேலும், சில பகுதிகளில் இந்த பனிச்சரிவில் மக்களும் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் பனிச்சரிவில் சிக்கித்தவித்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News