செய்திகள்
விமான விபத்து (கோப்புப் படம்)

கொலம்பியாவில் விமான விபத்து - 4 பேர் பலி

Published On 2020-02-13 05:16 GMT   |   Update On 2020-02-13 05:16 GMT
கொலம்பியா நாட்டில் இரட்டை என்ஜின்கள் கொண்ட சிறிய ரக விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களுக்குள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பொகடா:

தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. அந்நாட்டின் தலைநகரான பொகடாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. இரட்டை என்ஜின்கள் கொண்ட அந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

அங்குமிங்கும் பறந்த விமானம் பின்னர் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர்.

விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News