செய்திகள்
பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர்

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலி

Published On 2020-02-09 08:52 GMT   |   Update On 2020-02-09 08:52 GMT
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாகினர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. 

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகின்றனர். ராணுவத்தினரின் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகளும் அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். 

இதற்கிடையே, பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு அவர்கள் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுவருகின்றனர். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார் மாகாணத்தின் சாவ்கே பகுதியில் ராணுவத்தினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
Tags:    

Similar News