செய்திகள்
தாய்லாந்து கொடி

தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

Published On 2020-02-03 05:46 GMT   |   Update On 2020-02-03 11:00 GMT
கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.

பாங்காங்:

சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து நாட்டில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த நாட்டில் 19 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்த அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.

முதலில் இந்த குழு எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கான எச்.ஐ.வி. தடுப்பு மருந்தில் சில மாற்றங்கள் செய்து நோயாளிகளுக்கு வழங்கியது. அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதையடுத்து வழக்கமாக கடுமையான காய்ச்சலுக்கு கொடுக்கும் தடுப்பு மருந்துடன் எச்.ஐ.வி. கிருமி தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தையும் கலந்து தாய்லாந்து டாக்டர்கள் குழு கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கொடுத்தது இந்த மருந்து கலவை கொரோனா வைரசை குணப்படுத்தும் மருந்தாக மாறி டாக்டர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

 


காய்ச்சல் தடுப்பு மருந்தையும், எச்.ஐ.வி. கிருமி தடுப்பு மருந்தையும் சேர்த்து 71 வயது சீனப் பெண் நோயாளிக்கு டாக்டர்கள் கொடுத்தனர். தாய்லாந்துக்கு வந்திருந்த அந்த பெண் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்புடன் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

டாக்டர்கள் புதிய கலவை மருந்தை அந்த பெண்ணுக்கு கொடுத்த 48 மணி நேரத்துக்குள் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நேற்று அந்த பெண் தனது படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தார். அது மட்டுமின்றி காய்ச்சலும் விலகி விட்டது.

இதன் மூலம் காய்ச்சல் + எச்.ஐ.வி. தடுப்பு மருந்துகளின் கலவை உலக டாக்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையே தாய்லாந்து டாக்டர்கள் குழு காய்ச்சல் மருந்தையும், எய்ட்ஸ் மருந்தையும் சேர்ந்து கலந்து தயாரித்துள்ள புதிய வகை மருந்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் தங்கள் ஆய்வுக் கூடங்களில் சோதித்திப் பார்த்து வருகின்றன. அந்த சோதனைகளில் வெற்றி கிடைத்தால் கொரோனா வைரஸ் பரவு வதை வெற்றிகரமாக தடுக்க முடியும் என்று கருதுகிறார்கள்.

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழுவும் புதிய மருந்து தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் பாரம்பரிய சித்த மருந்து மூலம் இந்த வைரசை மிக, மிக எளிதாக விரட்ட முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News