செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட பகுதி

பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி

Published On 2020-01-28 11:03 GMT   |   Update On 2020-01-28 11:22 GMT
பாகிஸ்தானில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பணியில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர்.
லாகூர்:

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாணத்தில் ஷாதரா என்ற பகுதியில் வாசனை திரவியம் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. 

இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திரவியம் தயாரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.

இதனால் ரசாயன திரவியங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் பற்றியெறிந்த தீ தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் சிக்கிய 2 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் உள்பட 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.  
Tags:    

Similar News