செய்திகள்
ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர் (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலி

Published On 2020-01-27 17:29 GMT   |   Update On 2020-01-27 17:29 GMT
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 17 கிராமங்கள் மீட்கப்பட்டன.
காபுல்:

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான், ஐஎஸ் போன்ற பயங்கர அமைப்புகள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசுப்படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் நங்கர்ஹர் மாகாணம் ஷர்ஷாத் மாவட்டத்தில் ஆப்கன் ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதில் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 17 கிராமங்களை அரசுப்படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
Tags:    

Similar News