செய்திகள்
விபத்து

பெரு நாட்டில் பேருந்து விபத்து- 6 பேர் பலி

Published On 2020-01-23 05:21 GMT   |   Update On 2020-01-23 05:21 GMT
பெரு நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
லிமா:

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பேனமெரிக்கானா சூர் நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. டேம்பில்லோ அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென குறுகலான பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் பலியாகினர்.  பலர் காயமடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

பெருவில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2019ம் ஆண்டில் கார் விபத்துகளில் 717 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News