செய்திகள்
இந்தோனேசியா - பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி
இந்தோனேசியாவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள ஆற்றை கடக்க புதிதாக ஒரு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பாலத்தில் மாணவர்கள் உள்பட 30 பேர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த அனைவரும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் ஆற்றுள் சிக்கி தவித்த 20 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் இந்த விபத்தில் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.