செய்திகள்
ஏவுகணை தாக்குதலில் பலியான வீரர்கள்

ஏமன் - ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி

Published On 2020-01-19 02:24 GMT   |   Update On 2020-01-19 02:24 GMT
ஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள்மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலியாகினர்.
கெய்ரோ:

ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
 
இந்நிலையில், ஏமன் நாட்டின் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் ராணுவ குடியிருப்புகள் மீது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வகையை சேர்ந்த ஏவுகணை ஒன்று தாக்குதல் நடத்தியது.

இதில் 24 வீரர்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்கவில்லை.  
Tags:    

Similar News