செய்திகள்
மியான்மர் பஸ் விபத்து

மியான்மரில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாப பலி

Published On 2020-01-03 14:04 GMT   |   Update On 2020-01-03 14:04 GMT
மியான்மர்- தாய்லாந்து எல்லையில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாங்கூன்:

மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் இருந்து பேருந்து ஒன்று இன்று புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

மியான்மர் - தாய்லாந்து எல்லையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து எதிரே வந்த காருடன் வேகமாக மோதியது. 
 
இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர். இதி காரில் பயணம் செய்த 7 பேரும் அடங்குவர். மேலும், 33 பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News