செய்திகள்
ஈரானில் அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
ஈரானில் அணுமின் நிலையம் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தெஹ்ரான்:
ஈரானில் தென்மேற்கு பகுதியில் உள்ள புஷேகர் அணுமின் நிலையம் அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படடது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் அணுமின் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அணுமின் நிலைய செயல்பாட்டை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.