செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

Published On 2019-12-21 20:38 GMT   |   Update On 2019-12-21 20:38 GMT
16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை உருவாக்கி இருப்பது பற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வா‌ஷிங்டன்:

அமெரிக்காவில் முதன்முதலாக விண்வெளி படை தொடங்கப்பட்டுள்ளது. ‘ஸ்பேஸ் போர்ஸ்’ என்று அழைக்கப்படுகிற இந்த படைக்கு முதல் ஆண்டு செலவினத்துக்காக 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ.280 கோடி) ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த புதிய படையை உருவாக்கி இருப்பது பற்றி டிரம்ப் கூறும்போது, ‘‘விண்வெளி படை உலகிலேயே மிகவும் புதிய படை ஆகும். நமது தேச படைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருக்கிற நிலையில், விண்வெளியில் அமெரிக்காவின் உயர்ந்த நிலை மிகவும் முக்கியம். இந்தப் படையை நாம் தான் வழிநடத்துகிறோம். மிக விரையில் நிறையவற்றுக்கு நாம் வழிநடத்தப்போகிறோம். விண்வெளிப்படை ஆக்கிரமிப்பை தடுக்கவும், இறுதி நிலத்தை கட்டுப்படுத்தவும் எங்களுக்கு உதவும்’’ என குறிப்பிட்டு உள்ளார்.

விண்வெளிப்படை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இந்தப் படை விண்வெளியில் வைத்திருக்கப்பட மாட்டாது.

இது அமெரிக்க சொத்துகளை பாதுகாக்கும், நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களைப் போல தகவல் தொடர்பு கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் என்று வா‌ஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.

இந்த படைக்கு விமானப்படை தளபதி ஜே ரேமாண்ட் தலைமை தாங்குவார்; 16 ஆயிரம் வீரர்களை கொண்டிருக்கும் என விமானப்படை மந்திரி பார்பரா பேரட் கூறி உள்ளார். 
Tags:    

Similar News