செய்திகள்
ஜிம்பாப்வே: சாலை விபத்தில் 11 பேர் பலி
ஜிம்பாப்வே நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடந்த சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் கிழக்கு மாகாணத்தின் முடோகோ நகரில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானது. ஹராரே-நியாமபாண்டா நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது.
பேருந்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினர்.
ஜிம்பாப்வே நாட்டில் நெடுஞ்சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அலட்சியமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மோசமான சாலைகளால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.