செய்திகள்
தென்கொரியா சென்றுள்ள ராகுல் காந்தி- பிரதமர் லீ நக் யோன் சந்திப்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தென்கொரியா தலைநகர் சியோலில் அந்நாட்டின் பிரதமர் லீ நக் யோன்-ஐ இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சியோல்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஒரு குழுவினர் தென்கொரியா நாட்டில் அலுவல்ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் படங்களுடன் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘இருநாடுகளில் உள்ள நடப்பு அரசியல் சூழல், பொருளாதார நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் லீ நக் யோன் மற்றும் உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஒரு குழுவினர் தென்கொரியா நாட்டில் அலுவல்ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் சியோலில் தென் கொரியா பிரதமர் லீ நக் யோன்-ஐ ராகுல் காந்தி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் படங்களுடன் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘இருநாடுகளில் உள்ள நடப்பு அரசியல் சூழல், பொருளாதார நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் லீ நக் யோன் மற்றும் உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினோம்’ என குறிப்பிட்டுள்ளார்.