செய்திகள்
பாகிஸ்தான்: டேங்கர் லாரி, பேருந்து நேருக்கு நேர் மோதல்- 15 பேர் பலி
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கராச்சி:
பலுசிஸ்தான் மாகாணத்தின் கில்லா சைபுல்லா மாவட்டத்தில் உள்ள சாலை வழியாக சென்று கொண்டிருந்த பேருந்தும் டேங்கர் லாரியும் இன்று நேருக்கு நேர் மோதியது.
இதில் இரண்டு வாகனங்களும் சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘டேங்கர் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் இரு வாகனங்களும் தீப்பிடித்து பள்ளத்தில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக ஒருவர் மட்டும் ஜன்னல் வழியே வெளியே குதித்து உயிர்தப்பினார். இது விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவித்தனர்.
‘கடத்தல் எண்ணெய் மற்றும் டீசலை கொண்டு செல்லும் லாரிகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என பலூசிஸ்தான் மாகாண முதல்வர் தெரிவித்தார்.