செய்திகள்
38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்
சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் புறப்பட்டு சென்ற ராணுவ விமானம் மாயமானது.
சாண்டியா:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து நேற்று மாலை அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 38 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
சி-130 ஹெர்குலஸ் வகையை சேர்ந்த ராணுவ விமானம் மாயமாகி இருக்கிறது. விமானத்தை கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சிலி அதிபர் செபஸ்டியன் பினேரா கூறும்போது, ‘ராணுவ விமானம் மாயமான செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்றார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து நேற்று மாலை அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 38 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
சி-130 ஹெர்குலஸ் வகையை சேர்ந்த ராணுவ விமானம் மாயமாகி இருக்கிறது. விமானத்தை கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சிலி அதிபர் செபஸ்டியன் பினேரா கூறும்போது, ‘ராணுவ விமானம் மாயமான செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்றார்.