செய்திகள்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தலிபான் 15 பேர் பலி

Published On 2019-12-07 11:41 GMT   |   Update On 2019-12-07 11:41 GMT
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 15 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் நாளுக்குநாள்  அதிகரித்து வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல்களை அரங்கேற்றிவருகின்றனர்.

பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசுப்படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையினர் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டின் கந்தகார் மாகாணம், நிஷ் மாவட்டத்துக்குட்பட்ட கின்ஜக் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து நேற்று நள்ளிரவு அப்பகுதியை அதிரடியாக சுற்றிவளைத்த சிறப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 15 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும், 2 தலிபான்கள் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News